இந்தியா- இலங்கை ஒப்பந்தத்துக்கு புலிகள் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இந்தியா- இலங்கைக்கு இடையிலான ராணுவ ஒப்பந்தம், அமைதிப் பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்பிரிவு ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
இணையத் தளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
இந்தியாவுடன் இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது, ராணுவ பலத்தில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமச்சீரற்றதன்மையை ஏற்படுத்தும். அமைதிக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற செயலை தமிழ் மக்கள்அநாவசியமான செயலாகத் தான் பார்ப்பார்கள்.
மேலும் இது போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கும் எதிரான செயலாகும். தமிழர்களின் இந்தக் கருத்தை இந்தியாவிடம் தெரிவித்துவிட்டோம்.
மேலும் அமைதிப் பேச்சுவார்த்தையை இது பாதிக்கும். இது தொடர்பான எங்களது கருத்தை இந்திய அரசுக்கு நாங்கள் தெரிவித்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications