For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சி மடம் மூடல்: போலீஸ் பாதுகாப்பு ரத்து!

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு அளிக்கப்பட்டு வந்தபோலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

இஸ்லாமியத் தீவிரவாதிகள் மற்றும் தமிழ்த் தீவிரவாதிகளால் ஜெயந்திரருக்கு ஆபத்து இருப்பதாக இந்த போலீஸ்பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் தாங்கிய கமாண்டோ படையினர் 24 மணி நேரபாதுகாப்பை வழங்கி வந்தனர்.

மேலும் சங்கராச்சாரியாருக்கும் இந்தப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், சங்கராச்சாரியார்கைதான சில மணி நேரத்திலேயே சங்கர மடத்திற்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு ரத்துசெய்யப்பட்டது.

இதனால் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் உடனடியாக மடத்தை விட்டுக் கிளம்பினர்.

இதையடுத்து உடனடியாக தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியைச் சேர்ந்த ஆட்களை பணியில் நியமித்த காஞ்சிமடத்தின் நிர்வாகிகள், மடத்தையும் மூடிவிட்டனர்.

மடத்தின் முக்கிய நுழைவாயில் மூடப்பட்டு விட்டது. மடத்திற்குள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X