பாலஸ்தீன புதிய தலைவர் அப்பாஸை கொல்ல முயற்சி
ரமல்லா:
பாலஸ்தீனத்தின் புதிய தலைவர் முகமதுஅப்பாஸை கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உடல்நலமின்றி இருந்த பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் கடந்த வாரம் மறைந்தார். அதனையடுத்து புதிய தலைவராக முகமதுஅப்பாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் ரமல்லாவில் யாசர் அராபத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது திடீரென வந்த மர்ம நபர்கள்துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர்இறந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் பதாஹ் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டபோது,அப்பாஸ்க்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து அப்பாஸ் கூறுகையில், இது எனக்கு எதிரான கொலைவெறித் தாக்குதல் அல்ல என்றும், கூட்ட நெரிசலைகுறைக்க சிலர் வானத்தை நோக்கி சுட்டனர் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications