For Daily Alerts
Just In
சட்டசபை நாளை கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை 8 நாட்கள் மட்டுமே பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. குறுகியகாலத்தில் பொது விவாதம் இல்லாமல் கூட்டம் நடத்தப்படுவதைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள்சட்டசபை கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணித்தன.
இந் நிலையில் சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. பொதுவாக குளிர் கால கூட்டத் தொடர் 7 நாட்கள்நடைபெறும். இம் முறை கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு நாளைகூடி முடிவு செய்கிறது.
இந்த கூட்டத் தொடரில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது, வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுதொடர்பான விவாதம் அனல் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Monday, November 15, 2004, 5:30 [IST]