உச்ச நீதிமன்றத்தை நாட போவதில்லை: ஜெயேந்திரர்
வேலூர்:
ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதில்லை என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறி உள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை தொடர்பாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை சந்திக்க காஞ்சி சங்கரமட வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம், செல்லப்பா ஆகியோர் வேலூர் சிறைக்கு வந்தனர்.ஜெயேந்திரரை சந்தித்த பின்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அவர்கள் கூறியதாவது:
ஜெயேந்திரர் உடல் நலத்துடன் இருக்கிறார். அதே நேரத்தில் களைப்பாக உள்ளார். சிறையில் வழங்கப்படும் உணவுகளைத்தான்அவர் சாப்பிடுகிறார்.
ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிக்கான மருந்து மாத்திரைகள் அவருக்கு வழங்கப்படுகின்றன. உயர் நீதிமன்றத்தில் நடைபெறும்வழக்குகள் குறித்து அவரிடம் தெரிவித்தோம். பின்னர் ஜெயேந்திரர் எங்களிடம்,
என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை சட்டப்படி சந்திக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நமதுமக்களிடம் யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றும் என்னைப் பார்ப்பதற்காக வேலூர் வந்து சிரமப்பட வேண்டாம் என்றும்கூறுங்கள். அவர்கள் அவரவர்களுடைய குடும்ப வேலைகளை செய்து கொண்டு வீட்டிலேயே வழிபாடு செய்தால் போதும் என்றுகூறினார்.
ஜெயேந்திரர் தரையில் தான் படுத்து உறங்குகிறார். அவருக்கு 2 போர்வைகள் வழங்கப்பட்டு உள்ளது. சிறையில் வழங்கப்பட்டுஉள்ள பொருட்கள் மூலம் பூஜை செய்கிறார்.
ஜெயேந்திரரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போவதாக கூறப்படுவது ஜெயேந்திரருக்குத் தெரியாது. நாங்களும் எதுவும்கூறவில்லை என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications