குடும்பமே விஷம் குடித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
செம்பட்டி:
செம்பட்டி அருகே ஒரு குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் ஒரு தையல் தொழிலாளி. இவரது மனைவி ராமுத்தாய். இந்ததம்பதியினருக்கு படையப்பா, சதீஸ்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடலை கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்துவிசாரித்து வருகின்றனர்.
கடன் தொல்லை காரணமாக அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டனர் என்று அக்கம் பக்கத்தில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications