For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து மதத்துக்கு வந்த சோதனை: குட்டி சாமியார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயேந்திரர் கைது இந்து மதத்திற்கு வந்த சோதனையாகும் என்று சேலம் குட்டி சாமியார் கூறினார்.

மும்பை சீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று விட்டு சென்னை வந்த குட்டி சாமியார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

ஜெயேந்திரர் கைது மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. இப்போதைக்கு காஞ்சி மடம் செல்லும் எண்ணம் இல்லை. காஞ்சி மடத்தில்இருந்து இதுவரை அழைப்பு இல்லை. காஞ்சி மடத்தில் நான் இணையப் போவதில்லை என்று கூறினார்.

பின்னர் ஜெயேந்திரர் கைது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

பகவானின் சோதனை அனைவருக்கும் பொதுவானது. இந்த கால கட்டம் இந்து மதத்துக்கு வந்த சோதனையாகும். இந்து மக்கள்தத்தளிக்கின்றனர். இந்து மக்களின் மனக் கண்ணீர் சன்னியாசிகளுக்கு மிகப்பெரிய வருத்தம் தருகிறது. நான் சட்டத்தை எதிர்த்துபேசவில்லை.

நான் மனிதனாக சன்னியாசியாக ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்து மதத்தைக் காப்பாற்ற காஞ்சி மடம் 2,500 ஆண்டுகளுக்கு முன் தோற்றவிக்கப்பட்டது. சனாதான தர்மத்தை இது காப்பதால்இந்து மக்கள் இதை ஒரு கோயிலாகவே வழிபடுகிறார்கள். இதனை ஆட்சி செய்பவர்களே பீடாதிபதிகள்.

தற்போது இந்த மடத்திற்கு சோதனை வந்துள்ளது. இதிலிருந்து இந்து மதத்தையும் காப்பாற்ற இந்து மக்கள் எந்த தவறானவழிக்கும் போகாமல் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நான் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறேன். ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று பிரார்த்தனை செய்து வருகிறேன் என்றுகூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X