For Daily Alerts
Just In
யானைகள் முகாம் தொடக்கம்
முதுமலை:
முதுமலையில் இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று துவங்குகிறது.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி குத்து விளக்கு ஏற்றி வைத்து புத்துணர்வு முகாமை துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், சுற்றுலாத் துறை அமைச்சர் மில்லர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும் இந்து அறநிலைத்துறை ஆணையர் ராமகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் முத்துசாமி, உட்பட பலர் நிகழ்ச்சியில்கலந்து கொள்கின்றனர்.
இந்த புத்துணர்வு முகாம் 48 நாட்களுக்கு நடைபெறும் . இதற்காக 110 யானைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்துமுதுமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Comments
Story first published: Thursday, November 18, 2004, 5:30 [IST]