சந்திரிகாவின் ஏமாற்று வேலை: புலிகள் பதிலடி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திருப்பும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவிடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அரசு தயாராக இருப்பதாகவும், அதற்கான சூழல்உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து மாத இறுதிக்குள் புலிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்என்று சந்திரிகா கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக புலிகள், தமது ஆதரவு இணைய தளத்தில் கூறியிருப்பதாவது:

அமைதிப் பேச்சுவார்த்தையில் சந்திரிகா தலைமையிலான கூட்டணி அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு நார்வே தூதுக்குழுவினர் வழியாக சந்திரிகாவிற்கு தகவல் அனுப்பினோம். அதற்கு இதுவரை சந்திரிகா பதிலளிக்கவில்லை. ஆனால், இந்தக்கேள்விக்கு இதுவரை சந்திரிகா பதில் சொல்லவில்லை.

உண்மை நிலை இப்படியிருக்க, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த விரும்புவராக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவும், அதேநேரத்தில் கூட்டணிக் கட்சியான ஜே.வி.பியை அனுசரித்துச் செல்லவும் சந்திரிகா முயல்கிறார். சிறுபான்மை இனத்திற்கும்,விடுதலைப் புலிகளுக்கும் சலுகையும் வழங்குவதற்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இவர்களின் கூட்டணி கால, நேரத்திற்கு ஏற்ப விதவிதமான முகங்களைக் காட்டுகிறதேயொழிய, அமைதிப் பேச்சுவார்த்தையைநடத்த வேண்டும் என்பதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை.

சந்திரிகா சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது நிலையை பகிரங்கமாகஅறிவிக்க வேண்டும் என்று புலிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+