இது பொய் வழக்கு: சங்கராச்சாரியார் புகார்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் என்னை பொய்யாக சேர்த்திருக்கிறார்கள் என காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் கூறினார்.
அவரை போலீஸ் காவலில் எடுப்பது தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை காஞ்சிபுரம்மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நடந்தது.
அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜர்படுத்தப்பட்டார் சங்கராச்சாரியார். வழக்கு விசாரணையின்போது, போலீஸ்காவலில் போக நீங்கள் தயாரா என நீதிபதி உத்தமராஜன், சங்ககராச்சாரியாரிடம் கேட்டார்.
அதற்கு ஜெயந்திரர், நான் போலீஸ் காவலில் செல்ல மாட்டேன். அவர்களிடம் என்னை ஒப்படைக்காதீர்கள். என் உடலில்சர்க்கரை அளவு ஏறிப் போய் இருக்கிறது. மருத்துவர்களை அழைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. இந்த கொலைக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே என்னை விடுவிக்கவேண்டும். பொய்யான சாட்சியங்களைத் தயார் செய்து இந்த வழக்கில் என்னை சேர்த்திருக்கிறார்கள்.
என்னை போலீஸ் காவலில் ஒப்படைத்தால் அது நேர்மையான செயலாக இருக்காது, அது நீதியான செயலும் அல்ல.
ஆந்திராவில் வைத்து என்னை கைது செய்வதாகவே போலீஸ் சொல்லவில்லை. காஞ்சி மடத்துக்கு அழைத்துச் செல்வதாகத் தான்சொன்னார்கள் என்றார்.
உங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று நீதிபதி கேட்டபோது, நான் நன்றாக இருப்பதாக சொல்ல முடியாது என்றார்.
இதற்கு நீதிபதி, நீங்கள் முழு நலத்துடன் இருப்பதாக உங்களை பரிசோதித்த டாக்டர்கள் சொல்கிறார்களே என்று கேட்டபோது,இல்லை நான் நலமுடன் இல்லை என்றார் சங்கராச்சாரியார்.
இதையடுத்து வாக்குமூலத்தில் கையெழுத்திடும்படி நீதிபதி கூறியபோது ஜெயேந்திரர் மறுத்தார். பின்னர் கைரேகை மட்டும் பதிவுசெய்தார்.
சங்கர மடத்தின் வழக்கப்படி மடாதிபதிகள் கையெழுத்திடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாரியம் என்ற பதவியில்இருப்பவர் தான் மடாதிபதிக்காக கையெழுத்திடுவார்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications