For Daily Alerts
Just In
கூடங்குளம் வரும் ரஷ்ய அணு உலை
கூடங்குளம்:
தமிழகத்தில் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையத்துக்குத் தேவையான அணு உலையை ரஷ்யாஅனுப்பியுள்ளது.
தலா 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தி கொண்ட, 300 மில்லியன் டாலர் மதிப்பில் இரு அணு உலைகளைஇந்தியாவுக்கு தர ரஷ்யா முன் வந்தது.
இந்த உலைகள் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்பர்க் நகரில் உருவாக்கப்பட்டன. இதில் ஒரு உலையை நேற்று இந்தியாவிடம்ரஷ்யா ஒப்படைத்தது. இந்திய அணு சக்தி மையத்தின் தலைவர் எஸ்.கே. ஜெயினிடம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மேயர்வேலன்டினா இந்த உலையை ஒப்படைத்தார்.
இதையடுத்து கப்பல் மூலம் இந்த உலை கூடங்குளத்துக்குக் கொண்டு வரப்பட்டுக் கொண்டுள்ளது.
இன்னொரு அணு உலை அடுத்த ஆண்டில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். 2000ம் ஆண்டில் இந்த உலைகளைஇந்தியாவுக்குத் தரும் ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது.
Comments
Story first published: Friday, November 19, 2004, 5:30 [IST]