காவல் நிலையத்தில் ஜெயேந்திரருடன் வழக்கறிஞர் சந்திப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சங்கராச்சாரியாரை அவரது வழக்கறிஞர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார்.
போலீஸ் காவலில் இருக்கும் ஜெயேந்திரரை, தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை அவரது வழக்கறிஞர் சந்திக்கலாம் எனகாஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கியுள்ளார்.
இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு வழக்கறிஞர் கிருஷ்ணசாமி மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார். சங்கராச்சாரியாரை சந்திக்கஅவருக்கு அனுமதி தரப்பட்டது. 7 மணி முதல் 8 மணி வரை அவரைச் சந்தித்துள்ளார் கிருஷ்ணசாமி.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்கள் கண்ணில் படாமல் சாதுர்யமாக அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
ஜெயேந்திரர் குறித்து கிருஷ்ணசாமியின் கருத்தை அறிய நிருபர்கள் நெடுநேரம் காத்திருந்தனர். இரவு 9 மணியளவில் தான் கிருஷ்ணசாமிஅங்கு வந்துவிட்டுத் திரும்பிப் போன விவரமே தெரியவந்தது.