கலாமுடன் பர்னாலா சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா டெல்லி சென்று குடியரசுத் தலைவர்அப்துல் கலாமை சந்தித்தார்.
தமிழக ஆளுநராக பர்னாலா பதவி ஏற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்றார். அங்கு அவர் கலாமை சந்தித்துப் பேசினார். இதுமரியாதை நிமித்தமான சந்திப்பு என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர் பர்னாலா, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீலை சந்தித்துப் பேசினார். பர்னாலா பஞ்சாபில் இருக்கும் தனதுசொந்த ஊருக்குப் போய்விட்டு, அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.
ஜெயேந்திரர் கைது குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்ட பாஜகவினர் கலாமைச் சந்தித்துமனு கொடுத்திருக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் கலாமை பர்னாலா சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications