For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசோக் சிங்கலுக்கு கருணாநிதி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயேந்திரர் கைதுக்கு சோனியா காந்திதான் காரணம் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் கூறியிருப்பதுவிஷமத்தனமானது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கு கிறிஸ்தவரான சோனியா காந்திதான் காரணம் என்றுஅசோக் சிங்கால் கூறியிருப்பது அநாகரீகமானது, அடிப்படை இல்லாதது.

சோனியா கிறிஸ்தவர், ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட இடமான மகபூப் நகர் சார்ந்துள்ள ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகரரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்று கூறி எப்படியாவது இந்தப் பிரச்சனைக்கு மதச் சாயம் பூச அசோக் சிங்கல் முயற்சித்துள்ளார்.

ஜெயேந்திரர் கைது தொடர்பான விளக்கத்தை முதல்வர் ஜெயலலிதா அறிக்கையாகவே சட்டசபையில் வாசித்துள்ளார். இந்நிலையில் பொய் சொல்கிறோம் என்று தெரிந்து கொண்டே பொய்யை சொல்வது விஷமத்தனமானது என்று கூறியுள்ளார்கருணாநிதி.

பாஜகவுக்கு வைகோ கண்டனம்:

இதற்கிடையே இன்று கரூர் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜெயேந்திரர் கைது நடவடிக்கையை பா.ஜ.க. மதப்பிரச்னையாக்க முயல்வதாகவும் இந்தக் கைது நடவடிக்கையில் எந்த அரசியல் பின்னணியும் இல்லை என்றும் கூறினார்.

இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணுவும் இந்த விவகாரத்தில் பா.ஜ.கவின்அணுகுமுறையைக் கண்டித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X