இலங்கை: நீதிபதிகள் பாதுகாப்புக்கு தனிப் படை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கொழும்பில் உயர் நீதிமன்ற நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களின் பாதுகாப்பைஇலங்கை அரசு பலப்படுத்தியுள்ளது.
நீதிபதிகளின் பாதுகாப்புக்காக தனி போலீஸ் படை உருவாக்கப்படவுள்ளதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அலுவலகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
நாட்டில் தூக்கு தண்டனை அமலில் உள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2001ம் ஆண்டு ஜனவரியில் இருந்தே தூக்குதண்டனை அமலில் தான் இருந்து வருகிறது. இந் நிலையில் நேற்றில் இருந்து தான் தூக்கு தண்டனை மீண்டும் அமலுக்குவந்துள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.
மேலும் வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தேக்கங்களைப் போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications