120 வயது பாட்டி மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்செங்கோடு:
90 பேரன், பேத்திகளைக் கொண்ட 120 வயது மூதாட்டி மரணமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு சண்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சம்மாள். இவருக்கு 120 வயதாகிறது.
குஞ்சம்மாளுக்கு 2 மகன்களும், 6 மகள்களும் உள்ளனர். இவர்கள் மூலம் குஞ்சம்மாளுக்கு 21 பேரன்கள், 12 பேத்திகள், 57கொள்ளுப் பேரர்கள் உள்ளனர்.
ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த குஞ்சம்மாள் வயோதிகம் காரணமாக தனது சில நாட்களாக படுத்த படுக்கையானார். நேற்றுஅவர் மரணமடைந்தார்.
அந்தப் பகுதியினரின் அன்பைப் பெற்றிருந்த குஞ்சம்மாள் உடலுக்கு பலரும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications