For Daily Alerts
Just In
தீபவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சென்னைக்கும், திருவண்ணாமலைக்கும் இடையே 4 சிறப்பு ரயில்களை இயக்க தென்னகரயில்வே முடிவு செய்துள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள்.
இதையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 4 சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி வருகிற 26ம் தேதி காலை 9.30 மணிக்கும், மாலை 4.45 மணிக்கும் சென்னை தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்குசிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மறு மார்க்கத்தில் இரவு 11 மணிக்கும் அடுத்த நாள் காலை 6 மணிக்கும் தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
Comments
Story first published: Monday, November 22, 2004, 5:30 [IST]