வணிகர் பேரவை வெள்ளையன் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு கடையில், அரசுக்குச் சொந்தமான டாஸ்மார்க் மது பாட்டில்கள் இருந்தது தொடர்பாகதமிழக வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காலி டாஸ்மார்க் மது பாட்டில்கள் இருந்தன. இந்த பாட்டில்களைபோலீஸார் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மார்க் நிறுவன ஊழியர்கள் காலி பாட்டில்களை எடுத்துச் சென்றனர். அப்போது அதைவெள்ளையன் தடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து வெள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
சமீபகாலமாக அரசுக்கு எதிராக பல போராட்டங்களை வெள்ளையன் முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications