பண்ணையார்: விசாரணை கமிஷனுக்கு தடை
சென்னை:
வெங்கடேச பண்ணையாரை சென்னையில் போலீசார் சுட்டுக் கொன்றது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ராமன்கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த பெப்சி முரளி என்ற பாலமுரளி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்அவர் கூறியிருப்பதாவது:
வெங்கடேசப் பண்ணையாருடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.
அவர் கடந்த 2003 செப்டம்பர் 25ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ராமன் கமிஷனில்போலீஸ் துணை கமிஷ்னர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகள் பொய்த் தகவல்களை அளித்துள்ளனர்.
சமீர் என்ற தொழில் அதிபரை மிரட்டுவதற்காக துப்பாக்கியுடன் வெங்கடேசப் பண்ணையார் தயாராக இருந்தார் என்றுபோலீஸாரிடம் நான் கூறியதாக கூறியுள்ளனர். நான் அவ்வாறு போலீஸாரிடம் கூறவில்லை. விசாரணையில் இருந்துதப்பிப்பதற்காக அவர்கள் பொய்த் தகவல்களைக் கூறுகின்றனர்.
பண்ணையார் கொலை தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியல்ல. இதன் மூலம் சாட்சியங்களை அழிக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. இந்தக்கொலை வழக்கில் விசாரணைக் கமிஷனை அமைத்ததே தவறு, தேவையில்லாதது.
எனவே நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி அரசு வெளியிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்என்று தனது மனுவில் கோரியிருந்தார் பெப்சி முரளி. இவர் பண்ணையாரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனுவை விசாரித்த நீதிபதி தினகரன், ராமன் கமிஷன் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.












Click it and Unblock the Notifications