அரசுப் பதவியிலிருந்து ஜெயேந்திரர் நீக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசின் கோவில் சொத்து பாதுகாப்புக் குழு மற்றும் திருப்பணி தொடர்பான உயர் மட்டக் குழுத் தலைவர் பதவியிலிருந்துஜெயேந்திரர் நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களின் சொத்துக்களைப் பாதுகாப்பது, திருப்பணி நடத்துவது,கும்பாபிஷேகம் போன்ற பணிகளைக் கவனிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் தலைவராக ஜெயேந்திரர் செயல்பட்டுவந்தார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட முக்கிய கோவில்களின் கும்பாபிஷேங்களுக்கு நாள் குறித்தது அவர் தான்.

தற்போது சங்கரராமன் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பான உத்தரவு சங்கர மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இப்பதவியை ஏற்கனவே ஜெயேந்திரர் தானாகவே ராஜினாமா செய்து விட்டதாக சங்கர மட தகவல் தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+