சங்கரராமன் மனைவியிடம் ரூ. 5 லட்சம் வழங்கிய ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் வெட்டிக் கால்லப்பட்ட சங்கரராமன் குடும்பத்திற்கு தமிழக அரசின்சார்பில் ரூ. 5 லட்சம் நிதியை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.
சங்கரராமன் மறைவையடுத்து பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலை விற்றுத் தான் அந்தக் குடும்பம் பிழைத்து வந்தது.மேலும் உறவினர்கள், நண்பர்கள் சிறு உதவிகள் வழங்கி வந்தனர்.
அந்தக் குடும்பத்தின் வறுமையை மனதில் கொண்டு, அவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என ஜெயலலிதாஅறிவித்திருந்தார்.
இதையடுத்து சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் அனந்த சர்மா, மகள் வைதேகி என்ற உமா ஆகியோர் இன்று தலைமைச்செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் முதல்வர் ஜெயலலிதா ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
முதல்மைச்சர் நிவாரண நிதியில் இருந்து இந்தக் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஆறுதலும் கூறி அனுப்பி வைத்தார். வேறு ஏதாவது உதவிகள் தேவைபபட்டாலும் தன்னை நாடும்படியும்அவர்களிடம் ஜெயலலிதா கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications