For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிமன்றம் உத்தரவிட்டால் சிபிஐ விசாரணை: மத்திய அரசு

By Staff
Google Oneindia Tamil News

லக்னெள & டெல்லி:

சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட விஷயத்தில் நீதிமன்றமோ அல்லது தமிழக அரசோ கேட்டுக் கொண்டால் மட்டுமே சிபிஐவிசாரணைக்கு உத்தரவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து சட்டத்துறை அமைச்சர் பரத்வாத் லக்னெளவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விஷயத்தில் மத்திய அரசுதானாகவே எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதற்கு அதிகாரமும் இல்லை.

அதே நேரத்தில் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகும்பட்சத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதில் தவறில்லை என்றேநினைக்கிறேன். இந்த விஷயத்தில் அமைதி காப்பதே இப்போதைக்கு நல்லது என்றார்.

காஸ் விலை குறைப்பு:

இதற்கிடையே சமையல் காஸ் மீது மாதாமாதம் ரூ. 5 கட்டண உயர்வை அமலாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நெருக்குதலையடுத்து இதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்தது.

இந்தத் தகவலை பெட்ரோலியத்துறை அமைச்சர் அய்யர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X