திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நாளை மகா தீபம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி சிறப்பானஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் மகா தீப நிகழ்ச்சிகள் தொடங்கின.
நாளை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாலை 6மணிக்கு அண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மகா தீபம் நிகழ்ச்சியைக் காண பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிக பலத்தபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முக்கிய நகரங்களிலிருந்து ஏராளமானசிறப்புப் பேருந்துகளும் விடப்பட்டுள்ளன.
மகா தீபத்தைக் காண கோவிலுக்குள் செல்ல முடியாதவர்களுக்காக கோவிலுக்கு வெளியே 3 பிரமாண்ட திரைகள்அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தையும், பூஜைகளையும் பக்தர்கள் காண முடியும்.












Click it and Unblock the Notifications