10 தமிழக டாக்டர்களுக்கு மருத்துவ கவுன்சில் தடை
மதுரை:
பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணிபுரிந்த 10 மருத்துவர்களுக்கு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தடைவிதித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சில மருத்துவ கல்லூரிகளில் இந்திய மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த குழுவினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதில் 10 மருத்துவர்கள் முறைகேடுகள் செய்திருப்பது தெரிய வந்தது.
அந்த 10 மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்துள்ளது. மதுரை மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் மீதும்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே ஆசிரியர் 2 கல்லூரிகளில் வேலை பார்ப்பதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளில் சில கல்லூரி முதல்வர்களும்உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்திய மருத்துவ கவுன்சிலில் இருந்து அவர்களதுபெயரை நீக்கவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2007-ம் ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் 55 பேர் இதே போல மருத்துவ கவுன்சில் நடவடிக்கைஎடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications