4 இந்து முன்னணியினருக்கு ஜாமீன்
சென்னை:
ஜெயேந்திரர் ஜாமீன் மனு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த மோதலைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 இந்து முன்னணித் தொண்டர்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 13ம் தேதி ஜெயேந்திரர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில்நடந்தது. அப்போது வழக்கறிஞர்களுக்கும், இந்து முன்னணி தொண்டர்களுக்கும் இடையே பெரும் மோதல்மூண்டது.
இதையடுத்து மனோகரன், முருகன், ராம ரவிக்குமார், செல்வக்குமார் ஆகிய நான்கு இந்து முன்னணித்தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நால்வரும் ஜாமீன் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.கே.ராஜன், நால்வரும் தினமும் உயர்நீதிமன்றத்தில் உள்ள காவல் நிலையத்தில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications