இடி: ஒரே வீட்டில் 5 பேர் பலி
சென்னை:
சென்னை அருகே கொடுங்கையூர் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்துக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கொடுங்கையூர் பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இரவு 11 மணியளவில் இடியும், மின்னலும்வெட்டியது. இதில் திருவள்ளுவர் நகர் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் டிவி ஆண்டெனாவில் இடிஇறங்கியுள்ளது.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். இடி தாக்கியதில் டிவி பெட்டி வெடித்துச்சிதறியது. மேலும் மழையால் வீட்டின் சுவர்களும் ஈரமாக இருந்ததால், இடியுடன் மின்கசிவும் ஏற்பட்டது.
இதில் வீடு தீப்பிடித்துக் கொண்டது. இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த தாரிக், ஜமீலா, பாருக், சாதிக், ஜமீலாவின்வயதான தாயார் ஆகியோர் உடல் கருகி இறந்தனர்.
ஒரே வீட்டில் 5 பேர் இடிதாக்கியதால் ஏற்பட்ட மின் விபத்தில் பலியானது அப் பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications