ரமேஷ் தற்கொலைக்கும் அப்பு காரணம்?
சென்னை:
முன்னாள் சென்னை மேயர் ஸ்டாலினின் நண்பரான அண்ணா நகர் ரமேஷ் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதற்கு அப்புவே காரணம் என போலீஸ் தரப்பு சந்தேகப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கு ஒருபக்கம் படு சூடாக சென்று கொண்டிருக்கும் அதே சமயம், சென்னை அண்ணா நகர் ரமேஷ்குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கையும் போலீஸார் தூசி தட்டி எடுத்துக் காண்டிருக்கிறார்கள்.
அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை வழக்கிலும் அப்புவுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பு பலமாக சந்தேகப்படுகிறது.ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் ரமேஷ். அவருக்கு டிரைவர் போலவும் செயல்பட்டவர்.
திமுக ஆட்சியில் இருந்தபோது ரமேஷ் மிகப் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தவர். இந் நிலையில் ஆட்சி மாறி அதிமுக பதவிக்குவந்தது. அப்போது காண்டிராக்டர் தெய்வசிகாமணி என்பவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் திமுக முன்னாள் எம்.பி.பரசுராமன், அண்ணா நகர் ரமேஷ், ரவுடி பங்க் குமார் ஆகியோர் தன்னை மிரட்டி ரூ. 7 கோடி கேட்டதாக கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ரமேஷ் தலைமறைவானார். அவரது குடும்பத்தினரை போலீஸார் விசாரித்தனர். இந் நிலையில் தலைமறைவாகஇருந்த ரமேஷ் திடீரென்று தனது வீட்டில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார். அவரது 11 மாதமே ஆன குழந்தையும்விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தற்கொலை வழக்கு காலப்போக்கில் அப்படியே விடப்பட்டது. இந் நிலையில் இந்த வழக்குதற்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது. சங்கரராமனைத் தீர்த்துக் கட்டிய அப்புதான், ரமேஷ் தற்கொலைக்கும் முக்கியக் காரணம்என போலீஸார் பலமாக நம்புகின்றனர்.
அப்புவுக்கும் அப்போதைய திமுக அமைச்சர் ஒருவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் அந்த அமைச்சரின் நிழல்போல இருந்தவர் அப்பு என்றும் போலீஸ் தரப்பு கூறுகிறது.
எனவே அந்த அமைச்சரின் உத்தரவின் பேரில் ரமேஷுக்கு நெருக்குதல் கொடுத்து அவரைத் தற்கொலை செய்ய அப்புதூண்டியிருக்கலாம் அல்லது விஷம் கொடுத்துக் கொன்றிருக்கலாம் என்று போலீஸ் தரப்பு சந்தேகிக்கிறது.
எனவே சங்கரராமன் மற்றும் ரமேஷ் தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அப்புவைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில்இறங்கியுள்ளனர். அப்பு பிடிபட்டால் இரண்டு முக்கிய வழக்குகளின் முழுப் பின்னணியும் தெரிந்து விடும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications