2 மாத பெண் சிசுவை கொன்ற தந்தைக்கு வலைவீச்சு
மதுரை:
மதுரை அருகே உசிலம்பட்டியில் பிறந்து 2 மாதமே ஆன பெண் சிசுவை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தையை போலீஸார் தேடிவருகிறார்கள்.
உசிலம்பட்டி அருகே உள்ள கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிராஜா. இவரது மனைவி செல்விக்கு 2 மாதங்களுக்கு முன்புபெண் குழந்தை பிறந்தது.
பெண் குழந்தை பிறந்ததை விரும்பாத சீனிராஜா, தனது குழந்தையை கொன்று விடப் போவதாக கூறி வந்தார். இதனால்செல்வியின் உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி, குழந்தையை தாங்கள் வளர்த்துக் கொள்வதாகவும் அதைக் கொன்று விடவேண்டாம் என்றும் கூறியிருந்தார்கள்.
இந் நிலையில் தனது குழந்தையை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார் சீனிராஜா.அதிர்ச்சி அடைந்த செல்வி இதுகுறித்து செக்கானூரணி போலீஸில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் போலீஸார் சீனிராஜாவைத் தேடி வருகிறார்கள். உசிலம்பட்டியில் சில காலமாக இல்லாமல் இருந்து வந்த பெண்சிசுக் கொலை மீண்டும் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.












Click it and Unblock the Notifications