செக்ஸ் புகார்: மருத்துவமனையில் நகை கடை அதிபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசிய கேமராக்கள் மூலம் பார்த்து ரசித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் சென்னைகோடம்பாக்கம் விஸ்வாஸ் நகைக் கடை அதிபர் விஸ்வநாதனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர் விசாரணைக்குப்பயந்து அவர் உடல் நலம் சரியில்லை என்று கூறி தனியார் மருத்துவமனையில் சேர்ந்து விட்டார்.

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட நகைக் கடை விஸ்வாஸ் கோல்ட் மார்ட். துபாயிலும் இதன் கிளைஉள்ளது. இந்தக் கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார்கொடுத்தனர்.

அதில், தாங்கள் உடை மாற்றுவதை ரகசியக் கேமராக்கள் மூலம் கடை உரிமையாளர் பார்த்து ரசிப்பதாகவும், எங்களது உடல்அழகை ரசித்து ஆபாசமாக கமெண்ட் அடிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். மேலும் இதைத் தட்டிக் கேட்டால் கல்விச் சான்றிதழைதர மறுப்பதாகவும், திருட்டுப் புகார் சுமத்துவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தப் புகாரையடுத்து தியாகராய நகர் துணை கமிஷனர் முருகன் தலைமையிலான போலீஸ் படை விஸ்வாஸ் கோல்ட் மார்ட்கடைக்கு விரைந்தது. கடை முழுவதும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். கடை உரிமையாளர் விஸ்வநாதனிடமும்போலீஸார் விசாரணை நடத்தினர்.

பின்னர் விசாரணைக்குத் தேவைப்பட்டால் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று விஸ்வநாதனிடம் போலீஸார் தெரிவித்துவிட்டுச் சென்றனர். போலீஸார் சென்றதும் விஸ்வநாதன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம்சரியில்லை என்று கூறி சேர்ந்து விட்டார்.

இருதய நோய் இருப்பதால் தனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு வர இயலாத நிலைஏற்பட்டுள்ளதாகவும் அவரது சார்பில் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+