தமிழ் நடிகர்களே, தமிழுணர்வு எங்கே?
சென்னை:
தமிழ் உள்ளிட்ட பிற மொழி சினிமாக்களுக்கு தடை விதிக்கும் கன்னடத் திரையுலகினரைக் கண்டித்து தெலுங்குநடிகர்கள் உடனடியாக போராட்டம் நடத்தியுள்ள நிலையில், தமிழ் நடிகர்கள் மட்டும் ஆழ்ந்த அமைதி காப்பதுஏன் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் துணைத் தலைவர் கே.ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் பிற மொழி படங்களை திரையிடக்கூடாது என்று கோரி கன்னட திரையுலகினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின்போது தமிழ் உள்ளிட்ட பிற மொழி திரையுலகுக்கு எதிராக கோஷங்கள்போடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் நியாயமற்றது என்பதை உணர்ந்த தெலுங்கு திரையுலகினர் உடனடியாகதங்களது மாநிலத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் உணர்வு மிக்கவர்கள்.
ஆனால் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் நிடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்களுக்கு தமிழ்உணர்வே சுத்தமாக இல்லை, நன்றாக மரத்துப் போய் விட்டார்கள் என்றே தோன்றுகிறது.
தமிழால் பிழைக்கும் அவர்கள் தமிழுக்காக குரல் கொடுக்கக் கூட தோன்றாமல் அமைதி காப்பது ஏன்?
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளேன். இதை சில முன்னணி நடிகர்கள் (குறிப்பாகவிஜய்காந்த்) விரும்பவில்லை. ஆனால் அவர்களின் விருப்பத்திற்கேற்ப நான் செயல்பட முடியாது.
நடிகர் சங்கத்தில் வேண்டுமானால் அவர்கள் நாட்டாமை செய்யலாம். தயாரிப்பாளர் சங்கத்தில் தலையிடஅவர்களுக்கு என்ன உரிமை உள்ளது என்று கேட்டார் ராஜன்.
தமிழ்த் திரையுலக பிரச்சனைகளை முன் வைத்து அடிக்கடி குரல் கொடுத்து வருபவர் ராஜன். காவிரிப்பிரச்சினையில் தமிழ்த் திரையுலகம் அதிரடி போராட்டத்தை அறிவித்தபோது பாரதிராஜாவுடன் உடனிருந்தவர்.தமிழர்களால் பிழைத்துவிட்டு தமிழர்களை ஏமாற்றும் கன்னட நடிகர்களை விரட்ட வேண்டும் என்று கூறிவருபவர்.
திருட்டு விசிடி பிரச்சனையையொட்டி காவி உடை அணிந்து போராட்டம் நடத்தியவர். சமீபத்தில் நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த்துக்கும் இவருக்கும் பெரும் மோதலும் நடந்தது. அப்போது ராஜனை, விஜயகாந்த் மதுரைபாணி கெட்ட வார்த்தையால் சரமாரியாக அபிஷேகம் செய்ததாகவும் புகார் எழுந்தது.
இந் நிலையில் தான், தமிழ் நடிகர்களுக்கு தமிழ் உணர்வில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் ராஜன்.












Click it and Unblock the Notifications