ஜெ. நாளை டெல்லி பயணம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார்.
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பான சூழலில் அவர் டெல்லி செல்வது முக்கியத்தும் பெறுகிறது. கைது விஷயத்தில்ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரைக் கடிதம் எழுதியதும், அவருக்கு நாசூக்காக காரமான பதில் தந்து ஜெயலலிதாவும்கடிதம் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் திட்டக் கமிஷனின் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார். திட்டக் குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங்அலுவாலியாவுடன் இந்த ஆண்டுக்கான தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து விவாதிக்கும் ஜெயலலிதா, பிரதமரையும் சந்தித்துஜெயேந்திரர் கைது மற்றும் தமிழக வெள்ள நிவாரணம் குறித்து விவாதிப்பார் என்று தெரிகிறது.
நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் ஜெயலலிதா மாலையே சென்னை திரும்புவார். முன்னதாக இன்றிரரே அவர்செல்வார் என்று கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications