மேலும் 2 பேரை அடையாளம் காட்டிய பத்மா

Subscribe to Oneindia Tamil

சென்னை & காஞ்சி:

Padmaசங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரை, சங்கரராமனின் மனைவி பத்மாவும் மகள் உமாவும் இன்று சரியாகஅடையாளம் காட்டினார்.

கடந்த 22ம் தேதி சென்னை மத்திய சிறையில் நடத்தப்பட்ட அணிவகுப்பில் கொலையாளிகளான ரஜினி என்ற சின்னா மற்றும் கதிரவனைபத்மாவும், அவரது மகள் உமாவும் அடையாளம் காட்டினர்.

இன்று மீண்டும் நடத்தப்பட்ட அணிவகுப்பில் மாட்டு பாஸ்கர், அம்பி என்ற அம்பிகாபதி ஆகியோரை பத்மா முதல் சுற்றிலேயே சரியாகஅடையாளம் காட்டினார்.

20க்கும் மேற்பட்ட கைதிகளுடன் அவர்கள் கலந்து நிற்க வைக்கப்பட்டு இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்ராஜேந்திரன் முன்னிலையில் நடந்த அடையாள அணிவகுப்பு வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

3 முறை மீண்டும் மீண்டும் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டபோதும், இந்த இருவரையும் பத்மா சரியாக அடையாளம் காட்டினார்.

மாட்டு பாஸ்கர், அம்பிகாபதி, கதிரவன், சின்னா இந்த நால்வரும் தான் சங்கரராமனின் வீட்டுக்குச் சென்று பத்மாவிடம், உங்கள் கணவர்எங்கே என்று கேட்டு விவரம் தெரிந்து கொண்டு கோவிலுக்குப் போய் அவரைக் கொலை செய்தவர்களாவர்.

இவர்களைத் தவிர மேலும் இருவரும் உடன் சென்றனர். ஆனால், அவர்கள் வெளியிலேயே நின்று கொண்டதால் பத்மா அவர்களைப்பார்க்கவில்லை.

தில் பாண்டியன், குருவி ரவி மனு ஒத்திவைப்பு:

இதற்கிடையே அப்புவின் கார் டிரைவர்-கம்-அடியாள் கதிரவன் மற்றும் இந்தக் கொலை வழக்கில் பொய்யாக சரணடைந்த தில்பாண்டியன், சதீஷ், அதற்கு உதவி செய்த குருவி ரவி, சுந்தரராமன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர்6ம் தேதிக்கு காஞ்சி நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+