இன்ஸ்பெக்டரின் குடும்பம் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் இன்ஸ்பெக்டரின் மனைவி, மகன், மகள் ஆகியோர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தசாவுகளில் மர்மம் உள்ளதாகக் கருதப்படுகிறது.
சேலம் மரவனேரியில் வசிக்கும் இன்ஸ்பெக்டர் பிரேம்குமாரின் மனைவி சுகந்தமீனா. இவர் தனது மகன் வருண், மகள்திவ்யாவுடன் வீட்டில் தூக்கில் தொங்கியபடி கண்டுபிடிக்கப்பட்டார்.
இது தற்கொலை தானா என்பதில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சுகந்தமீனாவின் சகோதரர் மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார்.
அதில், இது தற்கொலையே அல்ல. இந்தச் சாவுகளில் மர்மம் உள்ளது. எனது தங்கை தனது கணவர் இன்ஸ்பெக்டர்பிரேம்குமாருடன் மகிழ்ச்சியாக வாழவில்லை என்று கூறியுள்ளார். மறைமுகமாக அவர் பிரேம்குமார் மீதே சந்தேகம்கிளப்பியுள்ளார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications