கேரள சாமியாருடன் தப்பியோடிய குறிஞ்சி சாமியார்!!
சென்னை:
உஷாவை சங்கராச்சாரியாருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகக் கூறப்படும் குறிஞ்சி சாமியார் திடீரென தலைமறைவாகியுள்ளார்.
சென்னை தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் ஒரு பெரிய பங்களாவில் ஆசிரமம் நடத்தி வந்தவர் இந்த குறிஞ்சி சாமியார்.பங்களாவின் வெளியே குடில்கள் போன்ற செட்-அப்பை அமைத்து, ஆட்களை அங்கு தங்கிச் செல்ல வைத்துள்ளார்.
மன அமைதி வேண்டி வருவோர், இந்த எளிய குடில்களில் தங்கி மனச் சாந்தி பெற்றுவிட்டுப் போவார்கள் என்று இந்த சாமியார் மீதுநம்பிக்கை வைத்திருப்பவர்கள் சொல்கின்றனர்.
இவரைத் தேடி அதிகமான பெண்கள் வந்து போவதுண்டு என்றும், அடிக்கடி வந்து போனவர்களில் உஷாவும் ஒருவர் என்கிறார்கள். இவர்தான் உஷாவை சங்கராச்சாரியாருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து இவரை விசாரிக்கச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி. அந்த பங்களாவைப் பூட்டிவிட்டு சாமியார் எஸ்கேப் ஆகிவிட்டார்.இவர் குறித்து போலீசார் விசாரித்தபோது, நெற்குன்றத்தில் ஒரு கேரளச சாமியாரின் வீட்டில் அவர் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கேரள சாமியாரின் வீட்டை போலீசார் தேடிச் சென்றனர். ஆனால், அந்த வீடும் பூட்டப்பட்டிருந்தது. வீட்டுஉரிமையாளரின் உதவியுடன் வீட்டை போலீசார் திறந்து சோதனையிட்டபோது பெண்களின் உள்ளாடைகளும் காலி பீர் பாட்டில்களும்கிடந்தன.
சாமியார் தங்கியிருந்த தங்கள் வீட்டில் இந்த லெளகீக அயிட்டங்கள் இருந்தது கண்டு வீட்டுக்காரர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சாமியார்களுக்கு எல்லாம் எதற்கு வீட்டை வாடகைக்கு விடுகிறீர்கள் என டோஸ் விட்ட போலீசார், வீட்டை சீல் வைத்துவிட்டுத் திரும்பிவந்துள்ளனர்.
கேளர சாமியாரும் குறிஞ்சி சாமியாரும் சேர்ந்தே தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது. இவர்கள் இருவருக்கும் சேர்த்து இப்போது வலைவீசப்பட்டுள்ளது.
உஷாவைப் போலவே பல பேரை குறிஞ்சி சாமியார் பெரிய இடங்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளதாக போலீஸ் கருதுகிறது.