அமெரிக்காவில் இந்தியரின் கேஸ் ஸ்டேசன் எரிப்பு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்காவில் விர்ஜீனியா மாகாணத்தில் சீக்கியர் ஒருவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.இனவாத அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சரப்ஜித் சிங் என்பவர் செஸ்டர்பீல்டில் இந்த கேஸ் ஸ்டேசன் வைத்துள்ளார். இதனை ஒரு கும்பல் தீ வைத்து எரித்ததோடு,ஆசியர்களுக்கும் வெள்ளையர் அல்லாதோருக்கும் எதிரான வாசகங்களை சுவர்களில் பெயிண்டால் எழுதிவிட்டுப் போயுள்ளது.
கடந்த 24ம் தேதி நடந்த இச் சம்பவத்துக்கு அமெரிக்காவின் சீக்கிய மத மற்றும் கல்விக் கவுன்சில் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11 தாக்குலுக்குப் பின் அமெரிக்காவில் இனரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதுகுறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் இத் தாக்குதல்கள் இரு மடங்காகிவிட்டதாக எப்.பி.ஐயே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications