சங்கர மடம் நடத்திய கட்டாயக் கல்யாணம்!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, அவரது காதலரிடமிருந்து பிரித்து வேறு ஒரு கட்டாயத் திருமணத்தை செய்து வைத்துள்ளதுசங்கர மடம். இது குறித்தும் ஒரு விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் அனுராதா. பிராமணப் பெண்ணான இவர் ஒரு வாலிபரைக் காதலித்து வந்துள்ளார். அவருடன் திருமணம்செய்து கொள்வதற்காக வீட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.
இதையடுத்து அனுராதாவின் குடும்பத்தினர் சங்கர மடத்தில் போய் புகார் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஜெயேந்திரர் உத்தரவுப்படி,அனுராதா தேடிக் கண்டுபிடித்து, காதலனிடமிருந்து பிரித்துக் காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டார்.
பின்னர் அனுராதாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து சங்கர மடத்திலிருந்தே திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்தத் திருமணத்தில் அனுராதாவுக்கு சம்மதம் இருந்ததா, எதற்காக இந்த திருமணத்தில் சங்கர மடம் அக்கறை எடுத்துக் கொண்டது என்பதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர்.