காஷ்மீரில் வெடிகுண்டு: 10 ராணுவத்தினர் பலி
ஸ்ரீநகர்:தெற்கு காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 10 ராணுவத்தினர் உட்பட 11 பேர்கொல்லப்பட்டார்கள்.
தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா கிராமத்தில் டாடா சுமோ காரில் ராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தபாதையில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டை தூரத்தில் இருந்தபடி தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர்.
இதில் அந்த கார் வெடித்துச் சிதறி, காரில் இருந்த ராணுவ வீரர்களில் 10 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பொதுமக்களில்ஒருவரும் பலியானார். பலியானவர்களில் ராணுவ உயர் அதிகாரி ஒருவரும் அடக்கம். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் கூடுதல் ராணுவத்தினர் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்தலுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன்தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நேற்று முன்தினம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலில் 5 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கொல்லப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.