வரதராஜபெருமாள் கோயில் அலுவலரின் ஓய்வு விருப்பம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையரான ஞானசம்பந்தன் விருப்ப ஓய்வு கோரி அரசிடம்விண்ணப்பித்துள்ளார்.
சங்கரராமன் இந்தக் கோவிலில்தான் மேலாளராக இருந்து வந்தார். இங்கு வைத்துத்தான் அவர் கொலையும் செய்யப்பட்டார். சங்கரராமன்கொலை வழக்கில் கோவில் ஊழியர்கள் மற்றும் செயல் அலுவலர் ஞானசம்பந்தன் உள்ளிட்டவர்களிடம் போலீஸார் பலமுறை விசாரணைநடத்தியுள்ளனர்.
சங்கரராமன் கொலை செய்யப்பட்ட அன்று இவர் காஞ்சிபுரத்தில் இல்லை. இருப்பினும் இவரிடம் கோயில் ஊழல்கள் குறித்தும் சங்கரமடம் தொடர்பான சில தகவல்களையும் போலீஸார் கேட்டுப் பெற்றுள்ளனர்.
இந் நிலையில் தனது பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற விரும்பி அரசிடம் விண்ணப்பித்துள்ளார் ஞானசம்பந்தன். இதுகுறித்து இன்னும்அரசுத் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ரிெதகிறது.
போலீஸாரின் தொடர் விசாரணைகளால் மனம் வெறுத்துப் போயுள்ளதாலேயே விருப்ப ஓய்வு கோரி ஞானசம்பந்தன்விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.