பாலியல் புகார்: கர்நாடக சாமியார் கொழும்பில் கைது
கொழும்பு:
இந்தியாவிலிருந்து சென்ற போலிச் சாமியார் ஒருவர் இலங்கை தலைநகர் கொழும்பில் பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாககைது செய்யப்பட்டுள்ளார்.
சாமியார்களுக்கு நேரமே சரியில்லை போலும். எங்கு பார்த்தாலும் சாமியார்கள் மீது புகார் எழுவதும், கைதாவதுமாக இருக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு போலிச் சாமியார், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் சாஸ்திரி என்பவர் கொழும்பு சென்றார். தன்னை சாமியாராக விளம்பரப்படுத்திக் கொண்ட அவர்தன்னிடம் பல்வேறு பிரச்சினைகளையும் தீர்க்கும் தாயத்து உள்ளதாக பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்தார்.
கொழும்பில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அவரிடம் ஏராளமானோர் வந்து தாயத்து பெற்றுச் சென்றனர். குழந்தை வரம் வேண்டிதாயத்து பெற ஒரு பெண் வந்திருந்தார். அவரிடம் கிஷோர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அந்த பெண் போட்ட கூப்பாட்டில் ஹோட்டலே கூடி விட்டது. இதையடுத்து சாமியார் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீதுவழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.