நீதிமன்றத்தில் அனுராதா ரமணன் ரகசிய வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

உத்திரமேரூர்:

Anuradhaஎழுத்தாளர் அனுராதா ரமணன் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சங்கராச்சாரியாருக்கு எதிராக ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

சங்கராச்சாரியார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ள அனுராதா ரமணனிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து இன்று காலை போலீஸ் வேனில் 2 பெண் காவலர்கள் துணையுடன் அவர் உத்தரமேரூர் கொண்டு வரப்பட்டார்.

அப்போது அவரைப் படமெடுக்க பத்திரிக்கையாளர்கள் முயல, புத்தகத்தால் முகத்தை மூடியபடி ஏன் படம் பிடிக்கிறீங்க என்று கோபமாகக்கேட்டார்.

டிவியிலும் பத்திரிக்கைகளுக்கும் பக்கம் பக்கமாக பேட்டி கொடுத்தீர்களே... இப்போது படம் பிடித்தால் ஏன் தடுக்கிறீர்கள் என்று பதிலுக்குநிருபர்கள் எகிற அங்கு டென்சன் கூடியது.

இந் நிலையில் அவரை விறுவிறுவென நீதிமன்றத்துக்குள் அழைத்துச் சென்றனர் போலீசார். அங்கு நீதிபதி ராமஜெயம் முன் 164வதுபிரிவின் கீழ் ரகசிய வாக்குமூலம் தந்தார் அனுராதா ரமணன். அப்போது நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், போலீசார் எனஅனைவரும் வெளியேற்றப்பட்டு நீதிமன்ற ஹாலின் கதவுகள் மூடப்பட்டன.

நீதிபதியிடம் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குமூலம் தந்துவிட்டுத் திரும்பினார் அனுராதா ரமணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+