சங்கர மட சொத்துக்கள் குறித்தும் விசாரணை ஆரம்பம்
காஞ்சிபுரம்:
சங்கர மடத்தின் சொத்துக்கள், மதுரையில் சங்கர மடத்திற்காக வாங்கப்பட்ட நிலங்கள் ஆகியவை குறித்தும் ஒரு சைட் டிராக் விசாரணையைஆரம்பித்துள்ளனர் போலீசார்.
சங்கர மடத்தின் சார்பாக 100க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் உள்ளன. இந்த அறக்கட்டளைகள் மூலம் பல்வேறு மருத்துவமனைகள்,விடுதிகள், பள்ளிகள், கல்லூகரிள், பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
இந்த அறக்கட்டளைகளுக்கு உள்ள சொத்துக்கள் குறித்து சங்கரராமன் ஏராளமான புகார்களை ஏற்கனவே தனது கடிதங்கள் மூலம்தெரிவித்துள்ளார்.
அறக்கட்டளையின் பெயரில் இல்லாமல் சில தனியார் பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டது குறித்தும், இந்த சொத்துக்கள் வாங்கியதில்பணம் சுருட்டப்பட்டது குறித்தும் அந்தக் கடிதங்களில் கூறப்பட்டிருந்த புகார்களை அடிப்படையாக வைத்து சங்கர மடத்தின் சொத்துக்கள்குறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சங்கர மடத்தின் பணப் புழக்கம், சொத்து விவரம் குறித்து வங்கிகளில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மதுரையில் சங்கரமடத்திற்கு சொந்தமாக ஏராளமான நிலம் வாங்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது.
இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த நிலத் தரகர்களான செல்வராஜ், செல்லப்பா ஆகியோர் காஞ்சிபுரத்திற்கு வரவழைக்கப்பட்டுஅவர்களிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர். எஸ்.பி.பிரேம்குமாரே அவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.