For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டர்: ஜெயேந்திரர் ஜாமீன் மனு மீது 10ம் தேதி தீர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Radha Krishnanஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரியார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுவின் மீதுவரும் 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை செசன்ஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இதனால் வழக்குத் தொடர்பாக கேஸ் டைரி உள்ளிட்ட ஆவணங்கள் உயர் நீதிமன்றத்தில் இருப்பதாகக் கூறிய அரசுத் தரப்பு,செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளிப் போட வைத்தது.

நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆடிட்டர் வழக்கிலான ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது. மனுவை நீதிபதிமுருகேசன் விசாரித்தார். ஜெயேந்திரர் சார்பில் தினகரனும், அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் துல்சியும் ஆஜராகிவாடினர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 10ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X