வழக்கை: வேறு மாநிலத்துக்கு மாற்ற பாஜக போராட்டம்
சென்னை:
ஜெயேந்திரர் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி வரும் 13ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக முடிவுசெய்துள்ளது.
தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மேலிடப்பொறுப்பாளரான பண்டாரு தத்தாத்ரேயா தலைமை வகித்தார்.
அதன் தேசிய செயலாளர் இல.கணேசன், மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான திருநாவுக்கரசர்,பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயேந்திரர் வழக்கை காவல்துறை விசாரிக்கும் விதம் சரியில்லை.விசாரணை அதிகாரி பிரேம்குமார் மீது கடுமையான புகார்கள் உள்ளன.
இதனால் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதே சரியாக இருக்கும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 13ம் தேதி தமிழகம்முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்
ஜெயேந்திரர் பலவீனம்: சகோதரர் கவலை
இதற்கிடையே ஜெயேந்திரர் மிகவும் பலவீனமாக காணப்படுவதாக அவரை வேலூர் மத்திய சிறையில் சந்தித்த அவரது சகோதரர்விஸ்வநாதன் கூறியுள்ளார்.
ஜெயேந்திரன் சகோதரர் விஸ்வநாத அய்யர், அவரது மருமகன் சுந்தர் ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்குச் சென்று ஜெயேந்திரரைபார்த்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜெயேந்திரர் முன்பு மாதிரி இல்லை. மிகவும் பலவீனமாகக் காணப்படுகிறார், எப்போதும் சோர்வாகவே இருப்பதாக தெரிவித்தார்.
அவரது உடல் நிலையில் என்ன பிரச்சினை என்பதை டாக்டர்கள் தெளிவாக்க வேண்டும். அவர் விரைவில் வெளிவர வேண்டும். அதுதான்எங்களது ஒரே பிரார்த்தனை என்றார்.
எதிர்க்கட்சி எம்.பிக்கள் வருகை:
இதற்கிடையே சிறையில் சங்கராச்சாரியாரை சந்திக்க பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர்வேலூர் சிறைக்கு வரத் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications