ஜெயேந்திரருக்கு திடீர் சிறப்பு மருத்துவ பரிசோதனை
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கு இன்று இரண்டு மணி நேரம் சிறப்பு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் மிகவும் பலவீனமாக இருப்பதாக அவரது சகோதரர் செய்தியாளர்களிடம் புகார்தெரிவித்திருந்தார். இந் நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் புருஷோத்தமன்விஜயக்குமார் தலைமையிலான குழு ஜெயேந்திரருக்கு பல மருத்துவப் பரிசோதனைகளை நடத்தியது.
சுமார் 2 மணி நேரம் இந்த மருத்துவப் பசோதனை நடத்தப்பட்டது. வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான் என்று கூறப்பட்டாலும் கூடஜெயேந்திரர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் தெரிவித்திருந்ததன் பின்னணியில் இது மிகுந்த முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தினமும் சிறை டாக்டர்கள் 3 முறை ஜெயேந்திரரின் உடல் நிலையை பரிசோதித்து வரும் நிலையில், இன்று மாவட்ட நலத்துறை துணைஇயக்குனரே நேரடியாக குழுவுடன் வந்து பரிசோதனை நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications