போதை: மூவரை கொன்ற ராணுவ வீரர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே குடிபோதையில், 3 பேரை வெட்டிக் கொன்ற முன்னாள் ராணுவ வீரருக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர்.
கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கிடந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர பாண்டியன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார்.
இவர் முன்பு ஒருமுறை குடிபோதையில் ஊரில் உள்ள சிலரை வெட்ட முயற்சித்துள்ளார். இதுகுறித்து போலீஸில் புகார் தெரிவித்தும் ஒருநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் குடித்து விட்டு நல்ல போதையில் வந்த சங்கர பாண்டியன், அரிவாளால் லட்சுமி, அவரது மகள் சக்தி, பேத்தி ஆகியோரைசரமாரியாக வெட்டித் தள்ளினார். பின்னர் வெறி அடங்காமல், குருசாமி, அவரது மனைவி கற்பகவள்ளி, அவர்களது மகன்முருகேசன்ஆகியோரையும் வெட்டித் தள்ளினார்.
இதில் லட்சுமி, சக்தி, முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள். மற்ற 3 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாகி விட்ட சங்கர பாண்டியனை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சங்கரபாண்டியனின் வெறிச் செயலால் 3உயிர்கள் பலியானதால், கோவில்பட்டி பகுதியல் பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications