பிரதமர் பாராட்டிய அன்புமணி!
டெல்லி:
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது சிறப்பாக பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியை பிரதமர் மன்மோகன் சிங்பாராட்டினார்.
மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது பிரதமர் மன்மோகன் சிங், அன்புமணியிடம் சென்று,
இன்று ஏகப்பட்ட சுகாதாரத்துறை தொடர்பான கேள்விகள் வரப் போகின்றன என்று கேள்விப்பட்டேன். நீங்கள் நன்றாகப் பதில்சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆல் தஸ பெஸ்ட் என்று கூறிவிட்டுச் சென்றார்.
அதேபோல் கேள்வி நேரத்தின் முதல் கேள்வியே சுகாதாரத்துறை தொடர்பாக அமைந்தது. தொடர்ந்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.அடுத்தடுத்து துணைக் கேள்விகள் என்று சுமார் 40-க்கும் மேற்பட்ட எம்.பிக்களின் கேள்விக் கணைகளை எதிர்கொண்டார் அன்புமணி.
எந்த பதற்றமும் தடுமாற்றமும் இல்லாமல் அழகிய ஆங்கிலத்தில் சுமார் 1 மணி நேரம் சளைக்காமல் பதில் தந்தார் அன்புமணி.
இதை அவையில் அமர்ந்து கவனித்தபடி இருந்தார் மன்மோகன் சிங்.
கேள்வி நேரம் முடிந்த பின், அன்புமணியிடம் திரும்பி, மிகச் சிறப்பாக பதிலளித்தீர்கள். வெரி குட் என்று பாராட்டிவிட்டுச் சென்றார்பிரதமர்.












Click it and Unblock the Notifications