For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செக்ஸ் புகார்: தளவாய் மீது வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தன்னை சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுகோரி பெண் மருத்துவர் கோமதி உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

தளவாய் சுந்தரம், சுகாதாரத் துறை செயலாளர், போலீஸ் கமிஷ்னர், சிபிஐ மண்டல இயக்குனர் ஆகியோர் மீது கோமதி வழக்குத்தொடர்ந்துள்ளா. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றியபோது, தளவாய்சுந்தரம் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.கடந்த 2003 செப்டம்பர் 19ம் தேதி நான் பணியாற்றும் இடத்துக்கே வந்து மிரட்டினார்.

இது குறித்து அதே மாதம் 22ம் தேதி முதல்வர், தலைமை நீதிபதி, போலீஸ் கமிஷ்னர் ஆகியோரிடம் புகார் கொடுத்தேன். அதன் பின்தளவாய் சுந்தரம் மருத்துவக் கல்லூரிக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். பின்பு என்னை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.

டிரிபியூனலில் வழக்கு போட்டு இடமாற்ற உத்தரவுக்கு தடை வாங்கினேன். அதன்பின்பு சென்னையில் பணி ஒதுக்காமல்இழுத்தடிக்கப்பட்டேன். பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததையடுத்து பணியில் சேர்க்கப்பட்டேன்.

நான் கொடுத்த புகார் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அமைச்சரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். எனவேஇது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு வருகிற திங்கட்கிழமை விசாரைணக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

கோமதி மனநலம் சரியில்லாதவர் என்று அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X