திருவாடுதுறை ஆதீனத்துக்கு ஏன் குரல் தரவில்லை?
திருச்சி:
ஜெயேந்திரருக்காக இந்து அமைப்புகள் எதுவும் போராட்டம் நடத்தவில்லை. அவர்களது முக்கியக் கவலையெல்லாம் சங்கர மடம் மற்றும்அதன் சொத்துக்களைப் பாதுகாப்பதுதான் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயேந்திரர் கைதை இந்துக்களின் மீதான தாக்குதல் என்று கூறுகிறார்கள் இந்துஅமைப்புகளின் தலைவர்கள்.
திருவாவடுதுறை இளைய ஆதீனம் மீது கொலை வழக்குப் பதிவானபோது இதே போல அவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டியதுதானே?அவரும் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு துறவிதானே? அவருக்காக ஒரு இந்து அமைப்பும் போராட்டம் நடத்தவில்லையே, அது ஏன்?
இந்து மடாதிபதி என்பதற்காக ஜெயேந்திரருக்காக இவர்கள் போராடவில்லை. சங்கர மடத்தையும், அதன் அபரிமிதமானசொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்றார் மணி.












Click it and Unblock the Notifications