ஜெயலட்சுமியிடம் சிபிஐ மீண்டும் விசாரணை
மதுரை:
ஜெயலட்சுமியிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.
ஏட்டையாவில் ஆரம்பித்து எஸ்.பி. வரையிலான பலதரப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாத்து வருகிறது.
இந்த விசாரணையை முடிக்க சிபிஐக்கு 2 மாத கால அவகாசம் தந்தது மதுரை நீதிமன்றம். அப்போது ஜெயலட்சுமி மற்றும் போலீசார் என40க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியது சிபிஐ.
இந் நிலையில் விசாரணையை முடிக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் தந்துள்ளது உயர் நீதிமன்றம்.
இதையடுத்து சிபிஐயின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட முறை ஜெயலட்சுமியிடம் விசாரணை நடத்தியுள்ளசிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் அவரிடம் விசாரித்தனர்.
மதுரை ரயில் நிலையத்தின் அருகே உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.
பல்வேறு நிதி நிறுவன அதிபர்களிடம் வாங்கிய பணம், பலரிடம் பண மோசடி செய்தது தொடர்பான புகார்கள் குறித்து ஜெயலட்சுமியிடம்இன்று விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.