For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலட்சுமியிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Jayalakshmiஜெயலட்சுமியிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.

ஏட்டையாவில் ஆரம்பித்து எஸ்.பி. வரையிலான பலதரப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாத்து வருகிறது.

இந்த விசாரணையை முடிக்க சிபிஐக்கு 2 மாத கால அவகாசம் தந்தது மதுரை நீதிமன்றம். அப்போது ஜெயலட்சுமி மற்றும் போலீசார் என40க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியது சிபிஐ.

இந் நிலையில் விசாரணையை முடிக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் தந்துள்ளது உயர் நீதிமன்றம்.

இதையடுத்து சிபிஐயின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட முறை ஜெயலட்சுமியிடம் விசாரணை நடத்தியுள்ளசிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் அவரிடம் விசாரித்தனர்.

மதுரை ரயில் நிலையத்தின் அருகே உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

பல்வேறு நிதி நிறுவன அதிபர்களிடம் வாங்கிய பணம், பலரிடம் பண மோசடி செய்தது தொடர்பான புகார்கள் குறித்து ஜெயலட்சுமியிடம்இன்று விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X