பிரான்சிடம் ராணுவ உதவி கோரும் பாகிஸ்தான்
பாரிஸ்:
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்சிடமும் ஆயுதங்கள் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளது பாகிஸ்தான்.
அல்-கொய்தாவைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் பாகிஸ்தான் உள்ளதாகக் கூறி அந் நாட்டுக்கு சமீபத்தில் பல பில்லியன்க்மதிப்பிலான ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது.
இதில் பி-3 ஓரியன் உளவு விமானங்கள், நீர்மூழ்கிகளைக் கண்டறிந்து அழிக்கும் விமானங்கள் ஆகியவையும அடங்கும்.
அதே நேரத்தில் இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக எப்-16 ரக நவீன போர் விமானங்களை பாகிஸ்தானுக்குத் தர அமெரிக்கா தயக்கம்காட்டி வருகிறது.
இந் நிலையில் பிரான்ஸ் சென்றிருந்த பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், அந்த நாட்டிடமும் ராணுவ தளவாடங்கள் வாங்க பேச்சுநடத்தியுள்ளார்.
சீனாவுடன் இணைந்து போர் விமானம் தயாரிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளைபிரான்ஸ்சிடம் பாகிஸ்தான் அதிபர் கோரியதாகத் தெரிகிறது.
பிரஞ்சு அதிபர் சிராக்கிடம் பேசிய முஷாரப், உலகளவில் இப்போதைய தீவிரவாதத்துக்கு பாலஸ்தீன பிரச்சனை தான் காரணமாக உள்ளது.அதைத் தீர்த்தால் தான் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும், பின்-லேடனைப் பிடிப்பதால் மட்டும் தீவிரவாதம் ஒடுங்கிவிடாது என்று கருத்துத்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications